கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அம்பை அருகே உள்ள சாட்டுப்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 26). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் அம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 9 மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அம்பை கோர்ட்டு கணேசனுக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் அம்பை போலீசார் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





