2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை வேம்பையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 29). இவர் கடந்த 2017-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பரமசிவன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கடந்த 2 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரைப் பிடிக்க நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பரமசிவனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி, அம்பை அனைத்து மகளிர் போலீசார், பரமசிவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story