ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி கற்பக விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது65). இவர் பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி வளர்மதி, மகன் ஆனந்தகுமார். இவர்களது வீட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சத்தம்கேட்டு உள்ளது. உடனே மோகன், ஆனந்தகுமார் 2 பேரும் எழுந்து பார்த்துள்ளனர். பின்னர் தூங்க சென்று விட்டனர். இந்தநிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவில் பார்த்தபோது 40 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story