மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலி திருட்டு


மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலி திருட்டு
x

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து கே.டி.சி. நகருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நைசாக சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுப்புலட்சுமி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story