உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு


உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
x

நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட பெண் ஒருவர் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

நிலத்தை அளக்க எதிர்ப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி லட்சுமி (வயது 52). இவருக்கு வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் விவசாய நிலம் உள்ளது. அங்கு இவருக்கும் மற்றொருவருக்கும் பாதை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறையினர் நேற்று அளப்பதற்கு சென்று உள்ளனர்.அப்போது லட்சுமி வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களது நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சி செய்தார். அவரை அருகே இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

தர்ணா

பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணனிடம் பாதை பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் அளப்பதை ஒரு மாத காலம் தள்ளிப்போட வேண்டும் எனக்கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். பின்னர் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட பெண் ஒருவர் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story