திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

நல்லாம்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பூசாரி தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

செந்துறை

தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தின் ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த மே மாதம் 23-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். முதலில் பூசாரி செந்தில் கரகத்துடன் தீமிதித்தார். அவர் மிதித்து கொண்டு தண்ணீர் குழி அருகே சென்றபோது தீக்குழியில் வீசப்பட்ட பூப்பந்தை எடுக்க முயன்றார். அப்போது தடுமாறி தண்ணீரில் விழுந்தார்.

பரபரப்பு

இதனைக் கண்ட இளைஞர்கள் மற்றும் போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதனால் தீமிதி திருவிழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.


Next Story