திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி மர்ம சாவு


திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி மர்ம சாவு
x

திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 25), கூலிதொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். சத்தியசீலனுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் கடந்த 1 ½ வருடங்களாக வசித்து வந்து உள்ளார். சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டில் இருந்த சத்தியசீலன் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்து உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராணி இது குறித்து சத்தியசீலனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதன் பேரில் அவர்கள் திருவண்ணாமலைக்கு நேரில் வந்தனர்.

மேலும் இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சத்தியசீலனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story