தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்தது


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்தது
x

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 2,533 ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று 1,487- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு 1025-ல் இருந்து 1072- ஆக உயர்ந்துள்ளது.


Next Story