இன்றைய புகைப்படத் தொகுப்பு (1-07-2022)


இன்றைய புகைப்படத் தொகுப்பு (1-07-2022)
x
தினத்தந்தி 1 July 2022 2:35 AM GMT (Updated: 1 July 2022 12:31 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இன்று கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

"நம்ம செஸ்... நம்ம பெருமை..." - செஸ் ஒலிம்பியாட் பேருந்துகளை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை; மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை

உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக வரும் நிலக்கரியை கொண்டுவர ராட்ச இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்

கோத்தகிரியில் குட்டிகளுடன் உலா வரும் கரடி

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி- சி 53 விண்ணில் செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி அருகே தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தன.

கோவை- மதுரை இடையிலான டி.என்.பி.எல் போட்டியில் கோவை அணி வீரர் முகிலேஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பாலாறு பெருவிழாவில் நடந்த யாகத்தில் சக்திஅம்மா கலந்து கொண்டு, பாலாற்றுக்கு மகாதீபாராதனை ஏற்றப்பட்டது.

ஏற்காட்டில் பலத்த இடியுடன் கூடிய பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் ஊர்ந்து சென்றனர்.

முதுமலையில் தொடர்மழையால் பசுமை: வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அருளானந்தர் கோவிலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சை கீழவாசல் பகுதியில் நேற்று மாலை பெய்த தூரல் மழையில் இரட்டை வானவில் அருகருகே தொன்றியது.

நாகர்கோவில்- நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அண்ணா நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே உள்ள கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகளை மீட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை கண்ணமங்கலம் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது...

விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி கலெக்டர் மேகநாத ரெட்டி வாழ்த்து பெற்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் போட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்து பேட்மிண்டன் விளையாடினார்.




Next Story