நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள்


நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள்
x

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்படடுள்ளன.

திருநெல்வேலி

நெல்லை நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய மின்கோட்டங்களில் 2-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும்,

ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குழி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி,

மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளிலும்,

வள்ளியூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை அந்தந்த மின்கோட்டத்துக்கு உட்பட்ட மின் வினியோக செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story