மணல் கடத்த முயன்ற டிராக்டர் டிரைவர் கைது

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்த முயன்ற டிராக்டர் டிரைவர் கைது
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தில் ராகவன் வாய்க்காலில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவசுந்தர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் ராகவன் வாய்க்காலுக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கடத்தி செல்வதற்காக டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பாா்த்த போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக டிராக்டர் டிரைவர் வடமருதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த துரைக்கண்ணு மகன் செந்தூரப்பாண்டி(வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story