திங்களூர் அருகே பரிதாபம்: தனியார் பள்ளி வேன் மோதி கணவன்-மனைவி பலி- திருமண நாளில் நேர்ந்த சோகம்


திங்களூர் அருகே பரிதாபம்: தனியார் பள்ளி வேன் மோதி கணவன்-மனைவி பலி- திருமண நாளில் நேர்ந்த சோகம்
x

திங்களூர் அருகே தனியார் பள்ளிக்கூட வேன் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நாளில் அவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு

கடத்தூர்

திங்களூர் அருகே தனியார் பள்ளிக்கூட வேன் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நாளில் அவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமண நாள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 55). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (50). இவர்களுடைய மகன் அரவிந்த். மகள் ஜனனி.

அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அரவிந்த் வேலை பார்த்து வருகிறார். ஜனனி திருமணமாகி கணவருடன் வெளியூரில் உள்ளார். சுந்தர்ராஜூக்கும், பழனியம்மாளுக்கும் நேற்று திருமணநாள் அதனால் இருவரும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்தனர். பின்னர் கோபியில் நடக்கும் உறவினர் ஒருவருடைய திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

வேன் மோதி 2 பேர் பலி

ெபருந்துறை அடுத்துள்ள திங்களூர் அருகே சென்றபோது எதிரே சீனாபுரத்தில் செயல்படும் ரிச்மான்ட் என்ற தனியார் பள்ளிக்கூட வேன் வந்துகொண்டு இருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தர்ராஜ், பழனியம்மாள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளிக்கூட வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் திருமணத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற கணவன், மனைவி திருமண நாளில் விபத்தில் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story