கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்; காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்; காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்; காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன் எடுத்து நடத்தினர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் புறப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முன்னதாக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே.என்.பாஷா தலைமையில் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் முன்னிலையில், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி.மாரிமுத்து ரெயிலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருசெல்வம் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அரவிந்தராஜ், கனகராஜ், அன்பழகன், துணைத்தலைவர் பாஸ்கர் ராஜ், சேவாதள மாநகர் மாவட்ட தலைவர் முகமது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story