ரெயில் மோதி மூதாட்டி பலி


ரெயில் மோதி மூதாட்டி பலி
x

கடலூர் அருகே ரெயில் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே வரக்கால்பட்டு பகுதியில் உள்ள தண்டவாளத்தை நேற்று மாலை அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story