பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி முகாம்


பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி முகாம்
x

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியம் வடுகூர் ஊராட்சியில் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் முறை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வேளாண் அலுவலர் நவீன் குமார் முன்னிலை வகித்தார். இதில் சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுதந்திராதேவி, மாசேதுங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story