விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி;26-ந் தேதி நடக்கிறது


விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி;26-ந் தேதி நடக்கிறது
x

விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 26-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம், வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் அல்லது 9385307022 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து, கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வரும்போது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story