அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்;

14- வது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலதாமதப் படுத்துவதை கண்டித்து வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் அரசு போக்குவரத்து கிளை கழக தலைவர் குமார், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் முருகானந்தம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story