மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி
x

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள சத்திரம்புதுகுளத்தைச் சேர்ந்தவர் மகாராஜா (வயது 27). இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், அவருடைய நண்பர் சபரிநாதனும் நேற்று மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபுரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகாராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story