சாலையில் கவிழ்ந்த லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சாலையில் கவிழ்ந்த லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

சாலையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மிளகாய் ஏற்றிக்கொண்டு திருச்சி வழியாக வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 39) ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் திருச்சி மன்னார்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது லேசான மழை பெய்துள்ளது. இதனால் லாரியின் முன்பக்க கண்ணாடியில் மழைநீர் வழிந்து சாலை சரியாக தெரியாததால் சக்திவேலின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நெடுஞ்சாலையில் உள்ள மைய தடுப்புச்சுவர் மீது ஏறி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் கிரேன் எந்திரத்தை வரவழைத்து லாரியை தூக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story