கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை


கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

திருச்சி, ஜூன்.8-

வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்

திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் டேவிட் அந்தோணி (வயது 47). இவருடைய மகன் டேவிட் கிங்ஸ்லி (20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை டேவிட்கிங்ஸ்லி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.

பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து, காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறாா்.

குடி பழக்கத்துக்கு அடிமையானவர் தற்கொலை

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (55). குடிபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அருணாசலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வலி குறையவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story