கால்சென்டர் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


கால்சென்டர் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் கால்சென்டர் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் கால்சென்டர் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கால்சென்டர் ஊழியர்

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மனோசந்தர் (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துள்ள இவர், திருச்சியில் உள்ள ஒரு கால்சென்டரில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சசிகலா (22). கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக வீட்டில் இருந்த படியே மனோசந்தர் வேலைசெய்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை மனோசந்தர் உணவை கீழே கொட்டியுள்ளார். அதை பார்த்த அவருடைய தந்தை தங்கராஜ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மனோசந்தர், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் ஊற்றிதற்கொலை

திருவானைக்காவல் மேலவிபூதி பிரகார பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் என்ற தங்கையன் (26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டில் தகராறு செய்தார். இதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தங்கையன் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story