வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்
x

வண்டலூர் உயிரியல் பூங்கா ஆயுதபூஜை விடுமுறை நாளான இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.

இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 4-10-2022 இன்று பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story