சரக்கு வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் சாவு


சரக்கு வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் சாவு
x

சரக்கு வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள வெளாமை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை (வயது 48). இவர் செஞ்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வெளாமையில் இருந்து செஞ்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி சக்தி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story