வெள்ளூர் சுந்தரமூர்த்தி, அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


வெள்ளூர் சுந்தரமூர்த்தி, அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x

வெள்ளூர் சுந்தரமூர்த்தி, அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரமூர்த்தி அய்யனார் மற்றும் பாப்பாத்தி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் வேதமந்திரங்கள் முழங்க, யாக பூஜை நடைபெற்றன. இதனை தொடர்ந்து கலசத்தை குருக்கள் தலை மீது சுமந்தபடி மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கோவில் சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு, சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story