வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு


வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
x

வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்ததால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை அணை பூர்வீக பாசன பகுதி 1,2,3-ஐ சேர்ந்த விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில்அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளது.

தண்ணீர் திறப்பு

அதன்படி விரைவில் ஒரு வாரத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. ஒரு வாரத்தில் மொத்தம் 1,340 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை அணை பூர்வீக பாசன பகுதி 2, 3-ல் உள்ள கண்மாய்களில் நீரை பெருக்க முடியும்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான உத்தரவை ஓரிரு நாட்களில் தமிழக அரசு வழங்கும் என்றும், தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடைேய இன்று அணையின் நீர்மட்டம் 70.5 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 740 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 769 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


Next Story