இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா?


இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா?
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 5:55 AM GMT)

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கொட்டாமேடு வேங்கூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் அனிதா(வயது 21). இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள் அனிதாவை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அனிதாவின் தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அனிதாவை தேடி வருகிறார்கள்.


Next Story