அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு


அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு
x

அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது அகரம் கிராமம். இங்கு கடந்த வருடம் நடைபெற்ற 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது சிறிய, பெரிய பானைகள், ஓடுகள், சுடு மண்ணால் ஆன உறைகிணறுகள், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், பழங்கால செங்கல் சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இங்கு 8-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தோண்டப்பட்ட முதல் குழியில் மண்பாண்ட ஓடுகள், சிறிய பானைகள், சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், பழங்கால விலங்குகளின் எலும்புகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. 2-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது சுடுமண் பாசிமணிகள், சிவப்பு நிற சிறிய மண் பானை போன்ற குடுவை கிடைத்து உள்ளது. தற்போது 3-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது 2 அடுக்குகள் உடைய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதல் அடுக்கின் மேல்புறம் வட்ட வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய தமிழர்கள் சிந்தனை செய்து, சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் என தெரிய வருகிறது.


Next Story