விபத்தில் பெண் சாவு; கணவர் படுகாயம்


விபத்தில் பெண் சாவு; கணவர் படுகாயம்
x

விபத்தில் பெண் உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62). இவரது மனைவி வனிதா(55).இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டிக்கு விக்கிரமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் கவுல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் (30) என்பவர், செல்லத்துரை மோட்டர் சைக்கிள் மீது மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி செல்லத்துரையும், அவரது மனைவியும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வனிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த செல்லத்துரை மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story