கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 20 Dec 2022 7:00 PM GMT (Updated: 20 Dec 2022 7:00 PM GMT)

வேடசந்தூர் அருகே ெமாபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள வி.புதுக்கோட்டை கிராமம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மனைவி காளியம்மாள் (வயது 57). இவர், தனது மகன் நடராஜன் என்ற நல்லசாமியுடன் விராலிப்பட்டியில் வசிக்கிற தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் காளியம்மாளும், நல்லசாமியும் மொபட்டில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். விராலிப்பட்டி அருகே மொபட் வந்து கொண்டிருந்தது. அப்போது தங்கச்சாம்பட்டியை நோக்கி சந்திரசேகரன் என்பவர் ஓட்டி வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக இறந்தார். ேலசான காயத்துடன் நல்லசாமி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story