'போக்சோ'வில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 20 April 2023 7:00 PM GMT (Updated: 20 April 2023 7:00 PM GMT)

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் ைகது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள பூதகுடி சுண்டைக்காய்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது42). கூலித்தொழிலாளி. இவர் 9 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். உடனே அவர் நத்தம் போலீஸ்நிலையத்தில் ஆறுமுகம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரணை நடத்தினார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.


Related Tags :
Next Story