மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை?


மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை?
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

சாயல்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ெதாழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ெதாழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தொழிலாளி சாவு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் காதர் மைதீன். இவருடைய மகன் ஜலாலுதீன் (வயது 46). தொழிலாளி. இவர் தற்போது சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜலாலுதீன் மற்றும் ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்த சீனி முகம்மது நிலவுதீன் (25), நிஷார் (28), ரசாலி (27), அஜ்மீர் கான் (25), நூர்லின் (30) ஆகியோருடன் ஒப்பிலான் கிராம பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜலாலுதீனை அவர்கள் மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜலாலுதீன் இறந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக ஜலாலுதீன் மனைவி நூர்நிஷா (38) கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, அவரது உடலை கைப்பற்றி கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மதுபோதையில் நடந்த தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை வாங்க மறுத்து கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு சுதிர்லால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜலாலுதீன் சாவுக்கு காரணமான 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து ஜலாலுதீன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.


Related Tags :
Next Story