தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சமத்துவபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் போடி நாத் (வயது 44). கூலி தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். போடி நாத், செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் பேசாமல் தனது வீட்டிற்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போடி நாத் மது போதையில் வீட்டிற்கு தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அவருடைய குடும்பத்தினர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பெட்டாஸ் ஷீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது போடி நாத் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போடி நாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story