தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே பூதங்குடி அன்னைதெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் இளையராஜா (வயது39). இவரது மனைவி மாலதி. நேற்றுமுன்தினம் இரவு இளையராஜாவுக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்தது. வலி தாங்கமுடியாமல் வீட்டிற்கு பின்புறம் கொட்டகையில் இளையராஜா தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story