தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கரூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

தற்கொலை

கரூர் அருகே பஞ்சமாதேவி அரசு காலனியை சேர்ந்தவர் மெய்யழகன் (வயது 47). கூலித்தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி பொன்மணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மெய்யழகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக எந்த வேலைக்கும் செல்லாமல் மெய்யழகன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமடைந்து காணப்பட்ட மெய்யழகன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

வழக்கு

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மது பழக்கத்தால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story