சாலை விபத்தில் தொழிலாளி பலி


சாலை விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Sep 2023 2:34 PM GMT (Updated: 8 Sep 2023 2:36 PM GMT)

சாலை விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஷபிர். இவரது மகன் நூர்தீன் (வயது 45), கூலித்தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மொபட்டில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை அருகே சென்றபோது நிலைதடுமாறிய அவர் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற அரசு பஸ்சில் மோதியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story