விபத்தில் தொழிலாளி சாவு: இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை


விபத்தில் தொழிலாளி சாவு: இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை
x

விபத்தில் தொழிலாளி இறந்ததற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

அரியலூர்

செந்துறை:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள திருவட்டதுறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 41). இவர், அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் பிட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 11-ந் தேதி இரவு நிகழ்ந்த சிறு விபத்தில் காயமடைந்த செல்வம், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், இழப்பீடு கேட்டு தனியார் சிமெண்டு ஆலையை முற்றுகையிட்டனர். செல்வத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அப்போது, உரிய இழப்பீடு தரப்படும் என்று ஆலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். விபத்து குறித்து தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story