மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
x

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் 1-ம் தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் சங்கரன்கோவில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு புரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்புவதற்காக இண்டிகேட்டர் போட்டு வந்துள்ளார்.

அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டர் சைக்கிள் ஷேக் மைதீன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் நவாஸ் ஷெரீப் (30) கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story