பாம்பு கடித்து தொழிலாளி சாவு


பாம்பு கடித்து தொழிலாளி சாவு
x

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆலடிவெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது60). கூலித்தொழிலாளி. இவர் பின்னையூரில் உள்ள ஒரு விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷப்பாம்பு கடித்தது. இதில் மயக்கம் அடைந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story