பாம்பு கடித்து தொழிலாளி சாவு


பாம்பு கடித்து தொழிலாளி சாவு
x

போளூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அண்ணாதுரை (வயது 40), கூலி தொழிலாளி.

அண்ணாதுரை அதே ஊரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் கடந்த 1-ந் தேதி கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மாரி போளூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story