விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் சாம்ராஜ் நகர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த முனுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story