கார் மோதி தொழிலாளி சாவு

வேலூர் அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 39), தொழிலாளி.
இவர் கடந்த 29-ந் தேதி அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக தண்டபாணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





