சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி


சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 April 2023 7:00 PM GMT (Updated: 4 April 2023 7:00 PM GMT)

வடமதுரை அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு செல்வதற்காக சித்துவார்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், செல்வராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்வராஜின் தம்பி சத்தியமூர்த்தி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடமதுரை எஸ்.கே.புதூரை சேர்ந்த சரக்கு வேன் ரமேஷ்குமார் (24) மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story