பள்ளி மாணவர்களுக்கு கைக்கெடிகாரங்கள்; மேயர் வழங்கினார்


பள்ளி மாணவர்களுக்கு கைக்கெடிகாரங்கள்; மேயர் வழங்கினார்
x

நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு கைக்கெடிகாரங்களை மேயர் சரவணன் வழங்கினார்.

திருநெல்வேலி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்து வகையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னணி திட்டமாகும். அதன்படி நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தான் படித்த நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் படிப்பில் முதல் 3 இடங்களை பிடித்த 165 மாணவர்களுக்கு கைக்கெடிகாரங்கள் மற்றும் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஆபிரகாம் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஷேக், அஸ்கர் அலி, ராஜசேகர், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story