காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த கிராண்ட் லைன் உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் குமார். ஆட்டோ டிரைவர். இவர், இமயவர்த்தினி(வயது 20) என்ற பெண்ணை காதலித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் மாலையும் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த இமயவர்த்தினி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய இமயவர்த்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமயவர்த்தினிக்கு திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


Next Story