தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது


தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது
x

தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லியை சேர்ந்தவர் ராமசாமி மகன் இசக்கிபாண்டி (வயது 40). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை வேலை முடிந்து பழவூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு சங்கன்திரடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (22) என்பவர் இசக்கிபாண்டியிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இசக்கிபாண்டி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்தார்.


Next Story