பெரம்பூரில் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது


பெரம்பூரில் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது
x

பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை

பெரம்பூர்,

கொளத்தூர் பொன்னியம்மன் மேடு தேவகி நகரை சேர்ந்தவர் ஜெபஸ்டின் என்கின்ற தேவேந்திரன் (வயது 29). இவர் செங்குன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஆன நிலையில், பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் மறுக்கவே ஆத்திரமடைந்த வாலிபர் ஜெபஸ்டின் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் வீட்டில் இருந்த தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செம்பியம் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story