வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது


வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

வாலிபர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வீடுகளில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடந்தது. இதேபோல கணேஷ்நகர், கந்தர்வகோட்டை பகுதிகளிலும் வீடுகளில் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருச்சி ஏர்போர்ட்டை சேர்ந்த விஷ்வபிரகாசை (வயது 20) இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீஸ்காரர்கள் பிரவீன்குமார், பிரபாகரன், செல்வராசு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பாராட்டு

கைதான வாலிபரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். தொடர் திருட்டில் ஈடுபட்ட விஷ்வபிரகாஷ் மீது ஏற்கனவே திருச்சியில் திருட்டு வழக்கு பதிவாகி உள்ளது.

இதில் அவர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் பதிவான விரல் ரேகைகளை வைத்தும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் விஷ்வபிரகாஷ் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story