குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் கடந்த 17-ந் தேதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரைகுண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.


Next Story