தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் முருகையா (வயது 32). இவரது மனைவி ஆனந்தி. தினமும் முருகையா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முருகையா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story