வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

நன்னிலம்;

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி சோளங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அருள்தாஸ் (வயது31) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர் கடந்த மாதம் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக அருள்தாஸ் வெளிநாட்டில் இருந்து வேலங்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் அருள்தாஸ் வீட்டின் அருகில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள்தாஸ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story